கொழும்பு பேரணியில் அமளி
Read Time:51 Second
கொழும்பு விகரமகாதேவி பூங்கா பகுதியில் வியாழக்கிழமை போர் எதிர்ப்பு முன்னணியினர் பேரணி நடத்தினர். அப்போது அங்கு வந்த தேசிய பிக்குகள் முன்னணியினர் “இங்கு பேரணி அவசியமில்லை. கிளிநொச்சிக்குச் சென்று அங்கு அமைதிக்காக போராடுங்கள்’ என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனால், கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது இரு அமைப்பினருக்கும் இடையே கைகலப்பு மூண்டது. பிக்குகள் வெளியேற்றப்பட்ட பின் ஊர்வலம் அமைதியாக நடந்தது. அதன் பின்னர் நடந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர்.