கேரளாவில் ஜப்பானிய பெண்ணுக்கு நடந்த கொடுமை…!!
Read Time:1 Minute, 18 Second
கேரளாவில் ஜப்பானிய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே கோவளம் பகுதியில் 35 வயதான ஜப்பானிய பெண் ஒருவர் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அவரை கடுமையாக தாக்கி, பின்னர் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேஜா (25) எனும் கர்நாடக இளைஞரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.
Average Rating