மலை மீது மோதி விபத்துக்குள்ளான விமானம்: பரிதாபமாக பலியான விமானிகள்…!!
பிரான்ஸ் நாட்டில் பறந்த சிறிய ரக விமானம் ஒன்று மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுற்றுலாவிற்கு பயன்படுத்தக் கூடிய சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.
விமானம் புறப்பட்டு சில மணி நேரத்திற்கு பிறகு பிரான்ஸில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காததால் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து விமானக் குழுவினர் நேற்று காணாமல் போன விமானத்தை தேடியுள்ளனர்.
சில மணி நேரங்களுக்கு பிறகு கிழக்கு பிரான்ஸில் உள்ள Chambery என்ற பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி கிடந்துள்ளது.
விமானத்தில் உயிரிழந்து கிடந்த இரண்டு விமானிகளையும் மீட்புக் குழுவினர் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானபோது சுமார் 2,200 மீற்றர் உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது.
மேலும், விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதா அல்லது விமானிகள் இருவருக்கும் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating