திண்டுக்கல்லில் பரபரப்பு: அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைப்பு…!!
Read Time:1 Minute, 11 Second
முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறந்து விட்டதாக பரவிய தகவலை அடுத்து நேற்று மாலை 6 மணி அளவில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. அதில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
பழனியில் இருந்து தேவக்கோட்டை புறப்பட்ட அரசு பஸ் நேற்று இரவு திண்டுக்கல் பை-பாஸ் சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் மறைந்திருந்து சரமாரியாக பஸ் மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதையடுத்து அந்த பஸ் திண்டுக்கல் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காரைக்குடி, தேவக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள். வேறு பஸ்கள் இல்லாததால் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.
Average Rating