காலை உணவை தவிர்ப்பதால் உடல் எடை அதிகரிக்குமா?
நாம் அன்றாடம் சாப்பிடும் மூன்று வேளை உணவுகளில், காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஏனெனில் அந்த நாளின் நம்முடைய உடலின் இயக்கமானது, காலையில் நாம் சாப்பிடும் உணவைப் பொருத்து தான் செயல்படுகிறது.
மேலும் நம் உடம்பில் உள்ள கலோரிகளை எரித்து, அன்றைய நாளில் நாம் செய்யும் வேலைகளை ஈடுபாட்டுடன் செய்ய உதவுகிறது.
எனவே காலை உணவை அனைவரும் தவிர்க்காமல் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
நாம் சாப்பிடும் காலை உணவானது, நிறைவாக இருந்தால், புரோட்டீன் மற்றும் கூர்மையான நினைவுத் திறன்களை தருவதுடன், இதயநோய், நீரிழிவு நோய், மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
காலை உணவை தவிர்க்க கூடாது என்ன காரணம்?
காலையில் நம் உடம்பில் அதிக செரிமான நொதிகள் சுரக்கிறது. இதனால் நாம் காலையில் எவ்வளவு சாப்பிட்டாலுமே அது விரைவில் ஜீரணம் ஆகிவிடுகிறது.
காலை உணவிற்கு பின் நான் எந்த ஒரு உணவுப் பொருட்களை சாப்பிட்டாலும் அது கொழுப்பு உணவாக மாறி ஜீரணமாகாமல், நமது உடல் எடை அதிகரிக்கிறது.
காலையில் செரிமான நொதிகள் சுரப்பதால், அதிகம் உணவு சாப்பிட்டாலும் கூட அது நமது இடுப்பு பகுதியில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து, இதயத்தை வலிமை அடையச் செய்கிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating