சொகலேட் குழம்புக்குள் விழுந்து உயிர் விட்ட இளம் பெண்: நடந்தது என்ன?

Read Time:2 Minute, 35 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-5ரஷ்யாவில் சொகலேட் குழம்புக்குள் விழுந்து இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சொகலேட் ஆலையில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாஸ்கோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Fedortsovo எனும் நகரில் குறித்த சொகலேட் ஆலை செயல்பட்டு வருகிறது.

குறித்த சம்பவத்தின் போது 24 வயதான ஸ்வெத்லான ரோஸ்லின என்பவர் உருகிய நிலையில் இருந்த சொகலேட் அண்டாவில் வேறொரு பாத்திரத்தில் இருந்து சேர்வை பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென்று கொதி நிலையில் இருந்த அந்த சொகலேட் அண்டாவுக்குள் இவர் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், சொகலேட் அண்டாவின் அருகாமையில் நின்று கொண்டு தமது மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது, அந்த மொபைல் குறித்த அண்டாவுக்குள் தவறியதாகவும், அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இவர் தவறி விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உண்மையில் அவர் சேர்வை பொருட்களை கலந்து கொண்டிருக்கையில் தான் தவறி விழுந்து இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த கலவையில் விழுந்த ஸ்வெத்லான ரோஸ்லினாவின் உடலை அந்த கலவையில் இருந்து பிரித்து எடுக்க முடியவில்லை எனவும், சொகலேட் கலவையின் வெப்பத்தால் அவரது உடல் கரைந்திருக்கலாம் எனவும், அவரது ஒரு கால் மட்டுமே எஞ்சியதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்குள்ளான பெண்மணிக்கு கணவரும் 5 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டிய பெண்…!!
Next post கற்பை இழப்பதை விட தற்கொலை செய்வதே மேல்! பெண்ணின் உருக்கமான கடிதம்..!!