கன்னியகோவில் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளிக்கு தர்ம அடி…!!
Read Time:1 Minute, 9 Second
புதுவை கன்னியகோவில் அருகே உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது41). விவசாய கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை மறைந்து நின்று ரசித்து பார்த்தார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை ராஜாராமன் கட்டிபிடித்து மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து ராஜாராமனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ராஜாராமனுக்கு தர்மஅடி கொடுத்து கிருமாம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜாராமனை கைது செய்தனர்.
Average Rating