பல ஆசைகளோடு வந்த என்னை சீரழித்து விட்டனர்! இளம்பெண்ணின் கண்ணீர் பேட்டி..!!

Read Time:2 Minute, 13 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-5சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட, தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்கா நாட்டை சேர்ந்த 25 வயதான பள்ளி ஆசிரியை சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். டெல்லி மாநிலத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற 5 ஸ்டார் ஹொட்டலில் அவர் தங்கினார்.

அங்கு வேலை பார்த்த ஹொட்டல் ஊழியர்கள் சிலர் சேர்ந்து அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து அந்த பெண் கூறுகையில், முதல் தடவை இந்தியா வருவதால் பல ஆசைகளோடு வந்தேன்.

நான் தங்கியிருந்த ஹொட்டலில் இருந்த ஊழியர்கள் எனக்கு வலுகட்டாயமாக போதை மருந்துகளை கொடுத்து இரண்டு நாட்கள் என்னை சீரழித்தனர்.

நான் இது குறித்து டெல்லி பொலிசில் புகார் அளிக்கவில்லை. இங்கிருந்த அமெரிக்க தொண்டு நிறுவனம் மூலம் புகார் அளித்து விட்டு என் நாட்டிற்கு சென்று விட்டேன்.

பின்னர் NGO மூலம் இந்திய பொலிசாரிடம் இந்த புகாரை அளித்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை மிகவும் மந்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

பொலிசார் இந்த வழக்கு சம்மந்தமாக இதுவரை 11 பேரிடம் விசாரணை நடத்தினாலும், யாரையும் இன்னும் கைது செய்யவில்லை.

இதனிடையில் இந்த வருடம் மட்டும் டெல்லி மாநிலத்தில் 1900 கற்பழிப்பு புகார்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை ஆப்பிள் சாப்பிடுங்க…!!
Next post ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஷம் வைத்து கொலை: வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!