திருவண்ணாமலை அருகே தலையில் பாறாங்கல் போட்டு இளம்பெண் கொடூர கொலை…!!

Read Time:2 Minute, 42 Second

201612251728214061_young-girl-killed-thiruvannamalai_secvpfதிருவண்ணாமலை அடுத்த மணலூர்பேட்டை ரோட்டில் அனக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கிருந்து சாவல்பூண்டி என்ற கிராமத்திற்கு செல்லும் பாதையில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ந்து போயினர். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தை பார்வையிட்டபோது, கொலையுண்ட பெண்ணின் தலை நசுங்கி இருந்தது.

பிணத்தின் அருகில் ரத்தக்கறை படிந்த பெரிய பாறாங்கல் கிடந்தது. எனவே மர்ம நபர்கள் தலையில் பாறாங்கல்லை போட்டு இளம்பெண்ணை கொன்றுள்ளனர். பெண் ஆடைகள் கலையப்பட்டும் இருந்தன.உடலில் நகக் கீறல்களும், காயங்களும் இருந்தன. எனவே கொலை செய்யப்படுவதற்கு முன்பு அப்பெண் வலுகட்டாயமாக கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேக்கிறார்கள். கொலையுண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் தெரியவில்லை.

கொலையுண்ட இளம் பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

இளம்பெண் பிணம் கிடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவிலேயே திருவண்ணாமலை- மணலூர்பேட்டை மெயின் ரோடு உள்ளது. ஆகவே, வேறு எங்காவது கொலை செய்துவிட்டு மாட்டிக் கொள்ளால் இருப்பதற்காக கொலை கும்பல் பிணத்தை இங்கு வீசினார்களா? என்ற மற்றொரு கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

பிணத்தை வீசிய பிறகே, இளம்பெண் தலையில் கொலை கும்பல் பாறாங்கல்லை போட்டனரா? என்ற கோணத்திலும் விசாரணையின் அடுத்த கட்டம் நகர்ந்துள்ளது.

கொலை கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுமார் 100 பேருடன் சென்ற ரஷிய விமானம் மாயம்…!!
Next post ‘சிங்கம் 3’ விநியோகஸ்தர்கள் வெளியிடும் ‘துருவங்கள் பதினாறு…!!