ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியது
Read Time:52 Second
ஈரான் நாடு நீண்ட தூரத்துக்கு பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணையை சோதித்து பார்த்தது. பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டு இருந்த நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து சாகெப் என்ற ஏவுகணையை அது சோதித்து பார்த்தது.அது மிகச்சரியாக இலக்கை தாக்கியது.
வருகிற 31-ந்தேதிக்குள் யுரேனியத்தை செறிவூட்டுவதை கைவிடவேண்டும், இல்லாவிட்டால் அதன் மீது தடை விதிக்கப்படும் என்று மேற்கத்திய நாடுகள் ஈரானை எச்சரித்தன. இந்த நிலையில் தான் ஈரான் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.