அசுர வேகத்தில் வந்த ரயில்! நூலிழையில் உயிர் தப்பிய இளம்பெண்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 15 Second
நியூசிலாந்து நாட்டில் ஒரு பெண் ரயில் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆக்லாந்து நாட்டில் பாதசாரிகள் சாலைகளைக் கடப்பதைப் போன்று ரயில்பாதைகளை கடப்பதற்கும் தனிப் பாதைகள் உள்ளன.
இங்குள்ள மவுண்ட் ஈடன் ரயில் நிலையத்தின் அருகே இருக்கும் பாதசாரிகள் கடக்கும் பாதையில் சிக்னல்களும், எச்சரிகை ஒலிக் கருவிகளும் செயலிழந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் மற்ற பயணிகள் பாதையைக் கவனித்தும் அவசரமாக ஓடியும் பாதுகாப்பாகக் கடந்த நிலையில் ஒரு பெண் மட்டும் ரயில் வருவது தெரியாமல் மிக மெத்தனமாக ரயில்பாதையைக் கடந்து நூலிழையில் உயிர் தப்பினார்.
அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Average Rating