ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கற்பழித்த வாலிபர் கைது..!!

Read Time:1 Minute, 13 Second

arrest (5)ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஜெயபிரியா (வயது15). 9-ம் வகுப்பு படித்துள்ளார்.

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சுருளியாண்டவர் மகன் பெத்துராஜ் (24) பழகி வந்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவரம் ஜெயபிரியாவின் தந்தைக்கு தெரியவந்தது. அவர் தனது மகளை திருமணம் செய்துகொள்ளும்படி கூறி உள்ளார். ஆனால் பெத்துராஜ், தான் கூலிவேலை பார்த்து வருவதால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறினார்.

இது குறித்து முருகன் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மைனர் பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பெத்துராஜை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீர் குடிப்பதற்கு கிணற்றுக்கு சென்ற 3 சிறுவர்கள் பலி..!!
Next post தி.மு.கவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் போட்டி..!! (கட்டுரை)