6 வயது சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியர்..!!
பெங்களூரில் 6 வயது சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Gulbarga மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அணில் பணியாற்றி வருகிறார்.
இவர் அப்பகுதியிலேயே, வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த சிவக்குமார்- சரஸ்வதி தம்பதியினரின் மகள் கடந்த புதன்கிழமையன்று காணாமல் போயுள்ளார்.
பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் அணிலின் வீட்டுக்குள் இருந்து எரிந்த வாடை வருவதை உணர்ந்த வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் சந்தேகமடைந்து பொலிசில் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் அணிலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய பொலிசார் அங்கிருந்த ஒரு கார்ட்டூன் பெட்டியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
6 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட அந்த சிறுமியின் உடல் கார்ட்டூன் பெட்டிக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்தது.
இந்த சிறுமி, சிவக்குமார்- சரஸ்வதி தம்பதியினரின் மகள் என்பது தெரியவந்துள்ளது. தற்போது சிறுமியின் உடலை பொலிசார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இப்படி ஒரு வெறிச்செயலில் ஈடுபட்ட அணிலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Average Rating