கணவர் கொடுமை… இறப்பதற்குமுன் இளம்பெண்ணின் உருக்கமான வீடியோ பதிவு..!!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் கொடுமைப்படுத்தியதால் உயிரை மாய்த்துக் கொள்வதாக, உயிரிழக்கும் முன் அப்பெண் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
நீடாமங்கலம் அருகே உள்ள சிக்கப்பட்டு கிராமத்தில் வசிக்கும் முருகப்பன்-கெளரி தம்பதிக்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியை முருகப்பன் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் திருமணமான ஆறே மாதத்தில் தம்பதி இருவரும் பிரிந்த நிலையில், 1 வருட காலம் ஆனதால் விவாகரத்து கோரி உள்ளனர். தீர்ப்பு வரும் நிலையில் முருகப்பன், தனது மனைவியிடம், சேர்ந்து வாழ விரும்புவதாகவும், எனவே வழக்கை வாபஸ் பெறுமாறும் கூறி உள்ளார்.
அதற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்து, வழக்கை வாபஸ் பெற்றதும், மனைவியுடன் நீடாமங்கலத்தில் 3 மாதம் முருகப்பன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் முருகப்பன் குடித்து விட்டு தினமும் அடித்துக் கொடுமைப்படுத்தியதால், மனமுடைந்த கெளரி, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக தனது செல்போனில், கணவர் கொடுமைப்படுத்தியதால் உயிரை மாய்த்துக் கொள்வதாக, கெளரி வீடியோ பதிவு செய்துள்ளார். தனது குழந்தையை, பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், கண்ணீருடன் உருக்கமாக கெளரி தெரிவித்துள்ளார்.
Average Rating