மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை: நீதிமன்றம் உத்தரவு..!!
இந்தியாவில் வளர்ப்பு தந்தையால் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட 10-வயது சிறுமியின் கருவை கலைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் ரோஹ்தக்கில் வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான 10-வயது சிறுமி பற்றிய தகவல் கடந்த வாரம் தான் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் சிறுமி என்று கூட பாராமல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
அப்போதே அவர் இந்தியாவில் கருகலைப்பு செய்ய அதிகபட்ச கால கட்டமான 20-வாரங்களைக் கடந்திருந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் சிறுமியை பரிசோதித்து கருக்கலைப்பு செய்யலாம் என்று தீர்மானித்தால் உடனே செய்யவும் என்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தையை மன்னித்து விடும் படி அவரது மனைவி கூறியுள்ளார்.
மகளின் வாழ்க்கை சீரழிந்து விட்டது உண்மைதான், ஆனால் அவர் தான் எங்கள் குடும்பத்தில் சம்பாதிப்பவர்.
என் மற்ற குழந்தைகளையும் நான் பார்க்க வேண்டும், இல்லையேனில் அவர்கள் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating