39 வயதில் 38 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..!! (வீடியோ)
உகாண்டா நாட்டில் 39 வயது பெண்மணி ஒருவர் 38 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
உகாண்டாவை சேர்ந்தவர் மரியம்(39), இவருக்கு 13 வயதில் திருமணமாகியுள்ளது. இவர் Hyper Ovulation பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது இவரது கருப்பைகள் ஒவ்வொரு சுழற்சிகளிலும் ஒரு முட்டைக்கு மேல் வெளியேற்றுகின்றன, இதனால் இவர் ஒரு பிரவசத்தின் போது இரட்டை குழந்தைகள், மூன்று குழந்தைகள் மற்றும் நான்கு குழந்தைகளையே பிரசவித்துள்ளார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வெளியேறிய காரணத்தினாலேயே இவருக்கு அதிக குழந்தைகள் பிறந்துள்ளது.
மரியம் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை முயற்சித்துள்ளார். ஊசிகளின் வாயிலாக மருந்துகளை பயன்படுத்தியும் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார், ஆனால் அவை அனைத்தும் யோனி வளையத்தில் எதிர்மறையாக நடந்துகொண்டது.
மொத்தம், இவருக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளன, அதில் 6 குழந்தைகள் இறந்துவிட்டதால் தற்போது 38 குழந்தைகள் உயிருடன் உள்ளன.
இவரது கணவர் இல்லாவிட்டாலும், அன்றாட சவால்களுடன் தனது குழந்தைகளை இவரே வளர்த்து வருகிறார்.
எனக்கு கிடைத்துள்ள குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என்றும், சுமை கிடையாது எனவும் கூறியுள்ளார்.
Average Rating