அளவுக்கு மீறிய மது: பறக்கும் விமானத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! (வீடியோ)
ரஷ்யாவில் இருந்து துருக்கி நோக்கி சென்ற விமானத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய பயணி ஒருவர் திடீரென தன்னை தானே தாக்கிக்கொண்டு ரத்தம் சொட்ட அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து துருக்கி நோக்கி சென்ற விமானத்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருக்கிறார்.
அவர் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல சத்தமாக கத்த ஆரம்பித்துள்ளார். எதிரே இருந்த இருக்கையையும் பலமாக குத்த ஆரம்பித்தார்.
இதில் அவரின் கை நரம்பு அறுந்து முகம், உடல் முழுவதும் ரத்தம் தெறித்தது. இதனை கண்ட சக விமான பயணிகள் அதிர்ச்சியடைந்து தங்கள் இருக்கையிலிருந்து வேறு இடத்திற்கு எழுந்து சென்றுள்ளனர்.
அரை மணி நேரத்திற்கும் மேல் இதே போல அந்த இளைஞர் செய்து வந்ததால், அந்த பகுதியே ரத்தக்களறியாக மாறியது.
இதனைத் தொடர்ந்து விமான ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து கை, கால்களை சேர்த்து அவரை சீட்டில் கட்டி வைத்தனர்.
ஆனால் இந்த களேபரங்களுக்கு இடையிலும் குறித்த நபரின் அருகாமையில் அமர்ந்திருந்த பெண்மணி எதுவும் அறியாதது போன்று எங்கோ வேடிக்கை பார்த்திருந்ததும், அந்த விமான ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் விமானம் அடால்யா விமான நிலையத்தை அடைந்ததும், விமான நிலைய பொலிசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
Average Rating