ஜனாதிபதி மஹிந்த அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு
Read Time:1 Minute, 1 Second
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசம் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் தேசிய பிரச்சினைக்கு சமாதான வழிகளில் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதனால் அணைத்து தரப்பினரும் பேதங்களுக்கு அப்பால் ஆதரவு நல்க வேண்டும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அரசு ஒருபோதும் தலைசாய்க்காது அச்செயற்பாடுகளுக்கு முகம்கொடுத்து அவற்றை முறியடிப்பதற்கான பலத்தையும், சக்தியையும் நாம் கொண்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.