நான்கு படங்கள் தயாரிக்க ஆவலாக இருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி..!!
நடிகை விஜயலக்ஷ்மி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் படம் பண்டிகை , படத்தினை மஹாலக்ஷ்மியின் கணவர் ஃபரோஸ் தான் இயக்குகிறார்.
இதில் கிருஷ்ணா- கயல் ஆனந்தி ,சரவணன் ,நிதின் சத்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய விஜயலக்ஷ்மி தான் முதலில்
நடிக்க வரும் பொழுது வீட்டில் ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் தயாரிக்க போவதாக கூறியதும் வேண்டாம் என்றும் எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்
இருப்பினும் தனது கணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரித்ததாகவும் அந்த நம்பிக்கை வீந் போகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கதை எழுதும் போதே கதையின் நாயகியாக கயல் ஆனந்தி என்று முடிவு செய்ததாகவும் படத்தில் பருதி வீரன் சரவணன் நான்ற நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கிருஷ்ணா முதல் முறையாக அதிக சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இதன் மூலம் படம் தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பதை தெரிந்துகொண்டதாகவும் .படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் ஆரா ப்லீம்ஸ் மகேஷ் வெளியிடுகிறார்
ஒரு கட்டத்தில் படம் தயாரிக்க வேண்டாம் என்று தோன்றியதாகவும் ஆனால் பண்டிகை படம் முடிந்து சிறப்பாக வந்திருப்பதை உணர்ந்ததால் மேலும் நான்கு படங்கள் தயாரிக்க ஆவலாக இருப்பதாக கூறினார்
Average Rating