அம்பாறை தேர்தல் வழக்கு எதிர்தரப்புக்கு நோட்டீஸ்!
Read Time:1 Minute, 9 Second
அம்பாறை மாவட்டத்தி;ல் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட தேர்தல் நீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு எதிர்வரும் ஜூலை 11ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உத்தரவிட்டது. மேன்முறையீட்டு நீதியரசர் சரத்ஆப்ரூ முன்னிலையில் இதுதொடபான மனு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் போட்டியிட்ட ஹசனலி, தயாகமகே ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர் தேர்தல் ஆணையாளர் அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் உட்பட பலர் இந்த மனுவில் எதிர்தாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே.
Average Rating