சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஐரோப்பாக் கிண்ணம் 2008: மேலதிக பாதுகாப்பிற்காக 8000 இராணுவத்தினர்
Read Time:1 Minute, 20 Second
சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஐரோப்பா கிண்ணம் 2008ற்கான உதைபந்தாட்டம் இதுவரை எவ்விதமான தடங்கலும் இல்லாது நடைபெற்று வருகின்றது. 8000 இராணுவத்தினரை தயாராக வைத்துள்ளது சுவிஸ் நாடு ஆனால் இதுவரை அவர்களின் ஈடுபாடு சிறிதளவே அவசியப்பட்டது. சுவிஸ் இராணுவத்தின் பேச்சாளரான Stefan Hofer கூறுகையில் இதுவரை ஐரோப்பிய உதைபந்தாட்டம் 2008 தங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தியதாகவும் நேற்று வரை எந்த விதமான தடங்கலும் ஏற்படவில்லை என்றும் கூறினார். மேலும் தெரிவிக்கையில் 8000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் இதில் அரைவாசிப்பேர் விளையாட்டு நடைபெறும் மாநிலங்களிலும் ஏனையோர் ஏனைய மாநிலங்களில் பிரிந்து செயலாற்றுவதாகவும் கூறப்பட்டது இதுவரை அனைத்தும் தாம் எதிர்பார்த்தது போல் நன்றாக நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
Average Rating