தெஹிவளையில் 22 தமிழர்கள் கைது
Read Time:57 Second
தெஹிவளைப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 22 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது நேற்றுமுன்தினம் அதிகாலை 3மணிமுதல் காலை 9.00 மணிவரை இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்றும் தொடர்ந்தும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating