இரண்டு சிறுவர்களை வவுனியாவில் காணவில்லை
Read Time:1 Minute, 3 Second
வவுனியா சாந்தசோலையை சேர்ந்த இரு சிறுவர்கள் நேற்றுமுன்தினம் காணாமல் போயிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது வவுனியா தம்பசைன்சோலை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆர்.நிரோஜன் (வயது14) மற்றும் திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் காளிமுத்து உதயகுமார் (வது14) ஆகியோரே காணாமல் போயிருக்கின்றனர். இந்த சிறுவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் பிற்பகல் வவுனியா நகருக்கு வந்தனர் என்றும் பின்னர் இவர்கள் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது சம்பவம் தொடர்பில் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் வவுனியா மனிதஉரிமை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்திருக்கின்றனர்.
Average Rating