அம்பாறை ஒழுவில் பகுதியில் அண்மையில் தாயையும் மகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவ சந்தேகநபர்கள் நால்வர் இனங் காணப்பட்டனர்
அம்பாறை ஒழுவில் பகுதியில் அண்மையில் தாயையும் மகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வரும் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி ஒலுவில் தென்னம் தோட்டத்தில் வைத்து தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐவரைப் பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர் அக்கரைப்பற்று மாவட்ட பதில் நீதவான் பயாஸ்ரஸாக் முன்னிலையில் இந்த 5சந்தேக நபர்களும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர் 4சந்தேக நபர்களையும் தாயும் மகளும் இருசாட்சிகளும் அடையாளம் காட்டினர் இதனையடுத்து சந்தேக நபர்கள் ஐவரையும் அடுத்தமாதம் 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் பயாஸ் ரஸாக் உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடந்த 14நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் ஐவரதும் நலன்கருதி அடுத்தமாதம் 4ம்திகதிவரை மொனராகலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கமாறு பதில் நீதவான் உத்தவிட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating