ஐக்கிய தேசிய கட்சியில் சஜித் பிரேமதாஸவின் செல்வாக்கு வலுப்பெறுகிறது
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் யாப்பை மாற்றியமைத்து தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க கட்சியின்தவிசாளர் ருக்மன் சேனநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என கட்சியின் பெரும்பாலானோர் கருத்து வெளியிட்டுள்ளனர் இவர்களில் ஜெயலத் ஜயவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோர் அடங்கியிருந்தனர் கடந்த காலத் தேர்தல் தோல்விகளுக்குத் தற்போதைய தலைமைத்துவமே காரணம் எனக் கட்சியின் பெரும்பாலானோர் கருத்து வெளியிட்டுள்ளனர் எதிர்கட்சித்தலைவர் பதவி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்தும் இருக்கும் எனினும் சஜித் பிரேமதாஸவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating