ஒருமாத காலத்தில் 9பேர் லெப்டினன்ட் கேணல், 14பேர் கப்டன், 51பேர் லெப்டினன்ட், 41பேர் இரண்டாம் லெப்டினன்ட் உட்பட 150 புலிகள் பலி!
Read Time:1 Minute, 15 Second
ஒருமாத காலத்தில் புலிகளின் சிறுவர் படையணி உட்பட 150 புலிகள் பலியாகியுள்ளனர். பெப்பிரவரி 17ம் திகதி தொடக்கம் மார்ச் 10ம் திகதிவரையிலான காலப்பகுதியிலேயே புலிகள் தரப்பில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். புலிகள் வெளியிட்டுள்ள சுவரொட்டிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று கட்டமாக வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50பேர் வீதம் மூன்று சுவரொட்டிகளிலுமாக 150பேரின் பெயர் விபரங்கள் அவர்களின் பதவி நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் 9பேர் லெப்டினன்ட் கேணல் பதவியையும், 14பேர் கப்டன், 51பேர் லெப்டினன்ட், 41பேர் இரண்டாம் லெப்டினன்ட் நிலைகளையும் ஏனையோரின் பதவிநிலைகள் அறிவிக்கப்படவில்லை. பலியானவர்களில் 20பேர் சிறுவர் படையணியை சேர்ந்தோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating