மகேஸ்வரன் கொலை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டது
Read Time:53 Second
கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என பொலிஸார் கூறியுள்ளதையடுத்தே நீதவான் ரவீந்திர பிரேமரத்ன இவர்களுக்கு பிணை வழங்கினார் என தெரிவிக்கப்படுகிறது.
Average Rating