மைக்ரோசாப்ட் தலைவர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் கண்ணீர் மல்க விடைபெற்றார்
Read Time:1 Minute, 19 Second
கம்ப்ïட்டர் உலகின் தந்தையாக கருதப்படும் பில்கேட்ஸ், 1975-ம் ஆண்டு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான `மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தை தொடங்கினார். அதன் தலைவராக 33 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தார். நீண்ட காலமாக உலகின் நம்பர் 1 பணக்காரராக திகழ்ந்து வந்தார். இந்நிலையில், 52 வயதாகும் பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார். தனது பெயரில் உள்ள அறக்கட்டளை பணிகளை கவனிக்கும் நோக்கத்தில் அவர் இம்முடிவை எடுத்துள்ளார். இருப்பினும், மைக்ரோசாப்டின் பகுதி நேர ஊழியராக அவர் நீடிப்பார். வாஷிங்டனில் அந்நிறுவன தலைமையகத்தில் பில்கேட்ஸுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. `மைக்ரோசாப்டை பற்றி ஒரு நாளும் நினைக்காமல் இருக்க மாட்டேன்’ என்று அவர் கண்ணீர் மல்க கூறி விடைபெற்றார்.
Average Rating