இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை புறக்கணிப்பதற்கு ஊடக அமைப்புகள் முயற்சி
இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை முற்றாகப் புறக்கணிக்க ஊடகத்துறையினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது இதுதொடர்பில் ஊடகத்துறை செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருப்பதாவது ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் வன்முறைகளை தொடர்ந்து இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க்மாநாட்டை புறக்கணிப்பதற்கு ஊடகவியல் துறை செயற்பாட்டாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதற்கான நடவடிக்கைக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதற்கான பாதுகாப்புகளை வழங்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது எமது நடவடிக்கைகளில் அரச ஊடகத்துறையினர் இணைந்து கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை எனினும் இந்த நாட்களில் அரச ஊடகத்துறையினர் விடுமுறைகளை எடுத்துக் கொண்டு ஊடகத்துறையின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு உதவும்படி நாம் அவர்களை கேட்டுக் கொள்கிறோம் என்று மேலும் தெரிவிக்கின்றனர்.
Average Rating