சடலமாக மீட்கப்பட்ட உரிமையாளர்!!
யாழ்ப்பாணம், ஆணைகோட்டை பிரதேசத்தில் இரும்பு உருக்கும் ஆலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிலுவை ராசா எனும் 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை
யாழ்ப்பாண நீதவானின் உத்தரவுக்கமைய சடலம் மேலதிக விசாரணைக்காக சடலம் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.