அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 3 பேர் காயம்!!

Read Time:1 Minute, 13 Second

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து 90 நிமிட பயணத்தில் வரும் கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். பள்ளியின் காவல் அதிகாரி உடனடியாக செயல்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அதிகமான உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தங்களது இணையதளத்தில் செய்தி வெளியிட்டது. இதையடுத்து பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிப்ஸ்… டிப்ஸ் இயற்கையான உதட்டுச் சாயம்(மகளிர் பக்கம் )…!!
Next post பெண்ணுக்கு பாலியல் சேட்டை விடுத்த மூவர் விளக்கமறியல்!!