நைஜீரியாவில் கடந்த மாதம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 76 பள்ளி மாணவிகள் விடுதலை!!
நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகளில் 76 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது தாக்குதல் நடத்துவது மற்றும் சிறுமிகளை கடத்தி செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு 200 சிறுமிகள் இந்த தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19ம் தேதி வடக்கு நைஜீரியாவின் டாப்சி பகுதியில் இருந்த பள்ளி ஒன்றின் மீது தீவிராவதிகள் தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்து 110 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். சிறுமிகளை கடத்திய தீவிரவாத அமைப்புடன் நைஜீரிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில், கடத்தப்பட்ட சிறுமிகள் அதிகாலை 3 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். 76 மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாரிடம் ஒப்படைக்கப்படவில்லை. பள்ளி முன் இறக்கி விடப்பட்டுள்ளனர்
Average Rating