ஆவாக் குழுவினைச் சேர்ந்த ஐவர் வாள்களுடன் கைது!!

Read Time:1 Minute, 22 Second

சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் ஆவாக் குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் இவ்வாறு கைதுசெய்யப்படதுடன், 4 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டினை மேற்கொள்வதற்கு எத்தணித்த போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சுன்னாகம் பொலிஸார் அதிரடியாக இறங்கி குறித்த ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், கைதுசெய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொலிஸார் மீது வாள்வெட்டு !!
Next post கார்ல் மார்க்ஸ் 200: உழைப்பை நினைவு கூர்தல்!!(கட்டுரை)