பதவியை இராஜினாமா செய்த ராகுல் காந்தி!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 33 Second

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே நான் கொடுத்து விட்டதால் நான் தலைவராக இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு காங்கிரஸ் தலைவர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்தார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மோதிலால் வோரா (90), அக்கட்சியின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தகவல் வெளியானது.

ஆனால், காங்கிரசின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, தனக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக நான் இல்லை எனக்கூறிய ராகுல் காந்தி, தனது டுவிட்டர் வலைதளத்தில் இருந்து ’காங்கிரஸ் தலைவர்’ என்ற பதிவை நீக்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகதிகள் முகாம் மீது விமான தாக்குதல்- 40 பேர் பலி!! (உலக செய்தி)
Next post மியா ஜார்ஜ் இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர்!! (சினிமா செய்தி)