ஒரே நாளில் 36 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா!! (உலக செய்தி)
இந்தியா முழுவதும் 37 ஆயிரத்து 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 18 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 223 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டையே உலுக்கி வரும் கொரோனா மகாராஷ்டிராவில் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, அம்மாநிலத்தில் 12 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று ஒரே நாளில் 790 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து இன்று ஒரே நாளில் 121 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வைரசில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ஆனால், அம்மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது.
Average Rating