இரு இளைஞர்கள் நேற்று விமான நிலையத்தில் கைது
Read Time:0 Second
� கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பொதிகள் சோதனையிடும் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருஇளைஞர்கள் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க காவல்துறையினர் தெரிவித்தனர். விமான நிலையத்தின் பயணிகள் செல்லும் பாதையை விடுத்து பொதிகள் சோதனையிடும் பகுதியினு}டாக இவ்விரு இளைஞர்களும் செல்ல முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாகவும் காவல்துறையினர் கூறினர். யாழ்ப்பாணத்தைச் சோந்த இவ்விரு இளைஞர்களும், இந்தோனேசியா செல்வதற்காகவே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் இவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.