பொலீசாரின் விசாரணைகளில் அரசு தலையிடுவதனாலே குற்றவாளி கைதாகவில்லை -ஜே.வி.பி!
Read Time:1 Minute, 9 Second
பொலீசாரின் விசாரணைகளில் அரசாங்கம் தலையிடுவதன் காரணமாகவே கம்பஹா மாவட்டம் வியாங்கொடையில் தமது உறுப்பினர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லையென்று ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி எம்.பி அனுரகுமார திசநாயக்க இந்தக் குற்றச்சாட்டினை இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது வெளிப்படுத்தியுள்ளார். வியாங்கொடை பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்த தமது கட்சி உறுப்பினர் ஒருவர் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவருக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை பொலீசார் எடுக்க தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating