விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 23பேர் கைது
Read Time:1 Minute, 8 Second
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 23பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றுமாலை கைது செய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பதினைந்து ஆண்களும், எட்டுப் பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் புலி உறுப்பினர்கள் என்றும், இவர்கள் பொதுமக்களுடன் மக்களாக இணைந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர முயற்சித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating