புதுமாத்தளன் வைத்தியசாலைப் பகுதியை இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பு

இலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பிரதேசத்தில் இருக்கும் புதுமாத்தளன் மருத்துவமனைப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இலங்கை இராணுவம் போரற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் கிழக்கு கடற்கரை...

வவுனியா பெண்நோயியல் நிபுணர் சுட்டுக்கொலை

வவுனியா பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் நிபுணராகிய (வீ.ஓ.ஜி)) டாக்டர் மீரா மொஹீதீன் நேற்றுமாலை 7.00மணியளவில் தோணிக்கல் தனியார் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு காயத்துக்கு உள்ளான அவர்...

விடுதலைப்புலிகளுடன் பேசுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது -ரணில் விக்கிரமசிங்க

விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டபோது தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் புதிய அனைத்துலக தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதனுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தான் விரும்புவதாக...

பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார் 40 வெளிநாட்டவர்கள் கொழும்பு மிரிகானை தடுப்பு முகாமில்..

பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார் 40வெளிநாட்டவர்கள் கொழும்பு மிரிகானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் விசா இன்று நாட்டில் தங்கியிருந்ததால் கைதுசெய்யப்பட்டதாக திணைக்களத்தின் உதவி...

விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால்.. தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள முடியாது: நோர்வே

விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால் நோர்வே மக்கள் மிகவும் களைப்படைந் திருப்பதாகவும், இவ்வாறான போராட்டங்களால் ஏற்படும் தொந்தரவுகளைச் சகித்துக்கொள்ளமுடியாதிருப்பதாகவும் நோர்வேயின் எழுத்தாளர் ஜான் ஹோர்ன் தெரிவித்துள்ளார். “நோர்வேயிலுள்ள தமிழர்கள் சிறந்த முறையிலேயே...

விசேட பிரதிநிதியை ஐ.நாவுக்கு அனுப்ப பிரித்தானியாவுக்கு உரிமையில்லை:கெஹலிய ரம்புக்வெல

இலங்கை நிலைவரம் குறித்து ஆராய விசேட பிரதிநிதியை ஐக்கிய நாடுகளுக்கு அனுப்ப பிரித்தானியாவுக்கு உரிமையில்லையென பாதுகாப்புப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் தலையிடுவதற்கு பிரித்தானியா உட்பட சர்வதேச சமூகத்துக்கு உரிமையில்லையெனவும்...

படகுகளில் வந்த பொதுமக்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்

வடகிழக்கின் கரையோரப் பகுதியில் 92 படகுகளில் சென்ற 1,500 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். 80 படகுகள் பருத்தித்துறை துறைமுகத்திற்குச் செல்வதற்கும், 12 படகுகள் புல்மோட்டைக்கு செல்வதற்கும் கடற்படையினர் வழித்துணை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு...

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினர் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் -கனடா

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினர் துரிதமான தீர்மானமொன்றிற்காக செயற்படுவதுடன் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமென்று கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் மனித அவலங்கள் தொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கெய்னோன் அறிக்கையொன்றினை இன்று...

தாக்குதல் மூலமே புலிகளை வெற்றிகாண முடியுமென்பதை நன்கு உணர்ந்துள்ளேன் -ஜனாதிபதி

புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவரை உயிருடனோ அல்லது உயிரற்ற நிலையிலோ பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைவதற்காக அவருக்கு வழங்கிய காலக்கெடுவின்...

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 23பேர் கைது

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 23பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றுமாலை கைது செய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். ஓமந்தைச் சோதனைச் சாவடியில்...

தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவொரு நபரும் நிபத்தனை விதிக்க முடியாது -பாதுகாப்புப் பேச்சாளர்

தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவொரு நபரும் நிபத்தனை விதிக்க முடியாதென்று பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இத்தகைய நிபந்தனைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் ஜனாதிபதியால் தெளிவாகத்...

பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்படும்வரை புலிகளுடன் எந்தவொரு உடன்படிக்கைக்கும் போகப் போவதில்லை -இராணுவத் தளபதி

படையினர் தற்போது பாதுகாப்பு வலயத்தினுள் உட்பிரவேசித்துள்ளனர். புதுமாந்தளன் வாவிப்பகுதியின் ஊடாக நேற்றிரவு படையினர் இந்தப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளனர் என்று தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேசமயம் இப்பகுதியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த 03 கிலோமீற்றர் நீளமான...