புலிகள்12வயது சிறுவர்களை படையில் இணைத்து வருகின்றனர் -கார்டியன் பத்திரிகை
புலிகள் 12வயது சிறுவர்களை படையில் இணைத்திருப்பதாக லண்டன் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. புலிகள் சிறுவர்களை பெற்றோரிடமிருந்து பலவந்தமாக இழுத்துச் செல்கின்றனர். பாரிய யுத்த உபகரணங்களை சிறுவர்களிடம் வழங்கும் புலிகள் அவர்களை பாதுகாப்பு முன்னரங்குகளுக்கு அனுப்புகின்றனர் என்றும் கார்டியன் குறிப்பிட்டுள்ளது. ஐ.நா சபையின் உள்ளுர் ஊழியர் ஒருவரின் 16வயது சிறுமி அண்மையில் புலிகளால் போர் நடவடிக்கைகளுக்காக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். புலிகளிடமிருந்து தமது பிள்ளைகளை பாதுகாக்கவென பெற்றோர் புலிகளுடன் பாதுகாப்பு வலயத்தில் வைத்து மோதலில் ஈடுபட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என கோர்டன் வொய்ஸ் என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தப் பயிற்சிக்காக புலிகள் பிள்ளைகளைக் கடத்திச் செல்வதால் அவர்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்படுகிறதெனவும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
Average Rating