முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது எறிகணை தாக்குதல் 26 பேர் ஸ்தலத்தில் பலி பலர் படுகாயம் -ஆனந்தசங்கரி!
Read Time:1 Minute, 5 Second
இன்று காலை 7:45 மணியளவில் முள்ளிவாய்க்கால் அரச வைத்தியசாலை மீது ஏவப்பட்ட எறிகணை தாக்குதலில் சிக்குண்டு 26நோயாளிகள் உடன்பலியானதோடு, மேலும் பலர் படுகாயமுற்றுள்ளார்கள் என்பதை மிக்க வருத்தத்துடன் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். வேறு சம்பவங்களிலும் காயமுற்ற பொதுமக்கள் 1000க்கு மேற்பட்டோர் கடந்த இரு நாட்களுக்கு மேலாக எதுவித சிகிச்சையும் பெறமுடியாமல் இருக்கின்றனர். உடனடியாக வைத்திய குழுவினை அனுப்பி வைக்குமாறும், இச்சம்பவங்கள் புலிகளினால்தான் ஏற்பட்டிருந்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்றும் த.வி.கூ.தலைவர் ஆனந்தசங்கரி ஜனாதிபதியை கோரியுள்ளார்.
Average Rating