செட்டிகுளம் மெனிக்காம் முகாமில் மீண்டும் தமது பணிகளை ஆரம்பித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர்..
Read Time:1 Minute, 2 Second
வவுனியா செட்டிகுளம் மெனிக்காம் முகாமில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் மீண்டும் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். இம்மாதம் இருபத்தோராம் திகதி மெனிக்பாம் முகாமிலுள்ள சில பகுதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் அதிகாரிகளில் சிலர் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சகல பகுதிகளுக்கும் செல்ல அனுமதி கிடைக்கலாமென செஞ்சிலுவைச்சங்க குழு தெரிவித்துள்ளது. இதேவேளை மோதல் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து வந்த வைத்தியர்கள் மூவரையும் செஞ்சிலுரைவச் சங்கக் குழுவின் அதிகாரிகள் சந்தித்ததாக சங்கம் தெரிவித்துள்ளது.
Average Rating