திருமலையைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியிரை மீளக்குடியமர்த்தும் ஏற்பாடு இரத்து!

Read Time:1 Minute, 57 Second

வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள திருமலையைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியிரை அங்கு அழைத்துச்சென்று மீளக்குடியமர்த்தும் ஏற்பாடு இரத்தாகியுள்ளது. முதற்கட்டமாக 3,500 பேரை திருமலைக்கு அழைத்துச்சென்று மீளக் குடியமர்த்துவதற்கு மீள்குடியமர்வு அமைச்சு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அவர்களில் 600பேரை முகாம்களில் இருந்து அழைத்துவந்து வவுனியா சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நேற்று அதிகாரிகள் தங்கவைத்திருந்தனர். வன்னி மீள்குடியமர்வு அமைச்சு அதிகாரிகள் வித்தியாலயத்துக்கு வந்த அகதி களை அழைத்துச்சென்று மீள்குடியமர்த்து வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனையொட்டி நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும் நண்பகலுக்குப் பின்னர் பாதுகாப்புக் காரணங்களுக்காக அகதிளை அழைத்துச்செல்லும் செயற்பாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரச அதிபருக்கு அறிவிக்கப்பட்டது. தங்க வைக்கப்பட்டிருந்த 600பேரும் மீளவும் அவர்கள் தங்கியிருந்த முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த வன்னி மீள்குடியமர்வு அமைச்சு அதிகாரிகளும் அனுராதபுரத்துடன் திரும்பிச்சென்று விட்டனர் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் வண்ணாத்திவில்லுப் பகுதியில் வைத்து கைது
Next post வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தரின் மரணத்தில் மர்மம்!