பாதாள உலகக்குழுவினருக்கு புலிகள் ஆயுதப்பயிற்சி வழங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்
தெற்கில் இயங்கிவரும் பாதாள உலகக்குழுவினருக்கு விடுதலைப்புலிகள் ஆயுதப்பயிற்சிகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது கடந்த காலங்களில் வன்னிக்கு சென்று குறித்த பாதாள உலகக்குழுக்கள் புலிகளிடம் ஆயுதப்பயிற்சியைப் பெற்றுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன மேலும் இவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் இளம் யுவதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது விடுதலைப்புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்ற பெண் ஒருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது 2002ம் ஆண்டுகாலப்பகுதியில் குறித்த பாதாள உலகக் குழுக்கள் வன்னிக்குச்சென்று ஆயுதப்பயிற்சி பெற்றுக்கொண்டுள்ளனர் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டுள்ள பாதாள உலகக் குழுக்களை கண்டுபிடித்து அவர்களை கைதுசெய்யம் நடவடிக்கையும் ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating