செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 300வயோதிபர்கள் இன்று பொறுப்பேற்பு
இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 300வயோதிபர்கள் இன்று அங்கிருந்து பொறுப்பேற்றுச் செல்லப்பட்டுள்ளனர். இந்த வகையில் 300வயோதிபர்கள் இன்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொறுப்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் வயோதிபர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தவிர வவுனியா ஆண்டியாப்புளியங்குளம் பாடசாலையில் இயங்கிவந்த தற்காலிக இடைத்தங்கல் முகாமானது இன்றையதினம் மூடப்பட்டுள்ளதாகவும், இதில் தங்கவைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருதமடு நிவாரணக் கிராமத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் ஆண்டியாப் புளியங்குளம் பாடசாலை வெகுவிரைவில் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating