மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா
Read Time:1 Minute, 14 Second
இந்நாட்டில் மாறுபட்ட கருத்துடையவர்கள் மாறுபட்ட சிந்தனையுடையவர்கள் பலர் இருக்கலாம் அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் எனக்கூறி கைதுசெய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று தெரிவித்தார். 7வது நாடாளுமன்ற முதலாவது அமர்வு இன்று காலை 8.30மணிக்கு ஆரம்பமானது சபாநாயகர் பிரதி சபாநாயகர் தெரிவுகளைத் தொடர்ந்து கட்சித்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு வாழ்த்துரை நிகழ்த்தினர் அதன்போது உரையாற்றிய ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்செகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் மேலும் ஜனநாயக நாட்டில் தனிமனித உரிகைள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating