நாடுகடந்த தமிழீழத்தை உருவாக்குவதில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் முனைப்பு
Read Time:1 Minute, 17 Second
விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகள் நாடுகடந்த தமிழீழ இராச்சியமொன்றை அமைப்பதில் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த போதிலும் இராஜதந்திர முனைப்புகள் முடிவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை அமைக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதாக அவர் தெரிவித்தள்ளார். தற்போது நாடு வேறு வகையிலான ஓர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவசரகால சட்டம் தளர்த்தப் பட்டுள்ளதாகவும் புலி ஆதரவு அமைப்புகளினால் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Average Rating