பட்டினியில் குழந்தையை வளர்க்கும் தாய்..!
Read Time:2 Minute, 3 Second
கிலோ எடையுடைய பிரிட்டனைச் சேர்ந்த தாய் ஒருவர் 2 வயது முதல் தன் குழந்தைக்கு மிகவும் குறைந்த பட்ச உணவையே கொடுத்து வளர்த்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது அந்த சிறுமிக்கு 8 வயதாகிறது. பொதுவாக 8 வயதுக் குழந்தைகளுக்கு இருக்கும் அளவிற்கான ஊட்டச்சத்து இந்தக் குழந்தையிடம் இல்லை என்றும் இதே நிலை தொடர்ந்தால் உடல்நலன் ரீதியான பல பிரச்சினைகளை சிறுமி எதிர்கொள்ள வேண்டி வரும் எனபதையும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் அந்த தாய் விடுவதாய் இல்லை. தொடர்ந்து இதே போன்று தான் தன் மகளை வளர்க்கப் போவதாக கூறுகிறார். 107 கிலோ இருப்பதால் தான் பட்ட வேதனைகளை மகள் அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுத்துள்ளதாக உறுதியாக கூறினார். தன் மகள் மிகவும் அழகாக புகழ்பெற்ற வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்வதாகவும் தனக்கு அதுவே முக்கியம் என்றும் கூறுகிறார். மேலும் தன் தாய் குண்டாக இருந்ததாலேயே தானும் குண்டாக இருப்பதாகவும், பல பரம்பரைகளாக தன் வீட்டில் தொடரும் குண்டு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டவே தன் மகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும் கூறுகிறார். முதலில் இந்த தாய் ஒரு மனோதத்துவ நிபுணரை போய் சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமென பிற மருத்துவர்கள் கூறி விட்டனர்
Average Rating