தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமாறு சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படும் ‐ சிவாஜிலிங்கம்..!
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சம்பந்தன் நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் சனிக்கிழமை ஈ.பி.டி.பி. கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அண்மைக்காலமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.
Average Rating