செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்தவர்கள் கைது
Read Time:56 Second
தமிழ்நாடு சென்னை செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் உண்ணாவிரதமிருந்த இலங்கை அகதிகள் 9 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தற்கொலைக்கு முயற்சி செய்ததாககூறி நேற்றிரவூ இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 9 பேரும் செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் நேற்று 25ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்பு முகாமிலிருந்து மாற்ற வேண்டும் என்றும்இ தங்களை விடுதலை செய்யூம்வரை உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கும் என உறுதியாக இருந்துள்ளனர். இதனையடுத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Average Rating